Blogs

1.3.2024 ராசி பலன்கள்

மேஷம் ராசிபலன் (Friday, March 1, 2024)இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். ஹாபிகளுக்காகவும் குடும்பத்தினருக்கு உதவுவதற்காகவும் சிறிது நேரத்தை நீங்கள் செலவிடலாம். இன்று உங்களால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது, இதன் காரணமாக உங்கள் காதலன் உங்களிடம் கோபப்படுவார். நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் கலந்து பேசுவது உங்களுக்கு நல்ல ஐடியாக்களையும் பிளான்களையும் தரும். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். பவர் கட் அல்லது வேறு காரணத்தால் காலையில் சிரம்ம் ஏற்படலாம்.ஆனல் உங்கள் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார்.அதிர்ஷ்ட எண் :- 7அதிர்ஷ்ட நீரம் :- கிரீம் மற்றும் வெள்ளைபரிகாரம் :- எந்தவொரு வடிவத்திலும் பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகளை மகிழ்விப்பது காதல் உறவுகளை நல்லதாக்கும்.ரிஷபம் ராசிபலன் (Friday, March 1, 2024)மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஆக்கிரமிக்க இடம் தராதீர்கள். அமைதியாகவும் டென்சன் இல்லாமலும் இருக்க முயற்சி

கொரோனா காரணமில்லை.. ஆனால்.. அதிகாலையில் விஜயகாந்த் உடல் நிலைக்கு என்ன ஆனது? பின்னணி

சென்னை: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நிலைக்கு என்ன ஆனது? அவரின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். இதையடுத்து மியாட் மருத்துவமனையில் இருந்து அவரின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு இன்று அதிகாலை தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.அதிகாலை அவரின் உடல்நிலை மிக மோசமடைந்தது. ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையோ பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.வழக்கமான பாதிப்பு இல்லை:அவருக்கு அவ்வப்போது இப்படி உடல்நிலை மோசமானது வழக்கம். இதற்காக அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதும் வழக்கம். ஆனால் இந்த முறை அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றதாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த சில வாரங்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் காலமானார்

சென்னை, நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் 18-ந்தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சையில் உடல்நலம் தேறிய நிலையில், கடந்த 11-ந்தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இதற்கிடையில் விஜயகாந்த் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தே.மு.தி.க தலைமை அலுவலகம் இன்று தெரிவித்தது. மேலும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தே.மு.தி.க. தலைமை அலுவலகம் தெரிவித்து இருந்தது.இந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், சிகிச்சை சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதையடுத்து அவரது உடல், மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது.விஜயகாந்த் உயிரிழந்த செய்தி கேட்டு

மேகமலை பற்றிய அழகும்,அதன் சுவாரஸ்யங்களும்.!

ஊட்டி, கொடைக்கானல், மூணாறு வரிசையில் ஜம்முனு வந்து அமர்ந்துகொண்டிருக்கிறது மேகமலை. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை, பெயருக்கு ஏற்றார்போல மேகங்கள் தவழ்ந்து செல்லும் ஓர் அழகிய இடம். மேற்குத்தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள மேகமலை, வன உயிரின சரணாலயமாக விளங்குகிறது. அரிதான ஹார்ன்பில், சலீம் அலி வவ்வால், எங்குமே காணக் கிடைக்காத ஹூட்டன் பிட் வைபர் பாம்பு முதலிய பல அரிய வகை பறவைகள், விலங்குகளின் வாழிடமாகத் திகழ்கிறது மேகமலை. இது பள்ளி விடுமுறைக்காலம் என்பதால் மேகமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதற்கு ஏற்றார்போல அருமையான க்ளைமேட் மேகமலைக்கு மக்களை இழுத்துவருகிறது என்றே சொல்லலாம்.எங்குமே காணமுடியாத சிறப்பான நில அமைப்பைக் கொண்ட மேகமலை ஆங்கிலேயரின் கண்டுபிடிப்பு. 1920-களில் தேயிலை தோட்டங்களை அமைத்தனர். தற்போது ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அந்தத் தேயிலை தோட்டங்கள் விரிந்து பரவியுள்ளன. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மேகமலை தற்போது தேர்வு நிலை

எந்த வகையான சோபாக்களை வாங்கலாம் என்று தெரிந்துக் கொண்டு வாங்குங்கள் . ( WOODEN SOFA VS FABRIC SOFA)

                                              WOODEN SOFA VS FABRIC SOFAஒரு மர சோபாவிற்கும் துணி சோபாவிற்கும் இடையே தேர்ந்தெடுப்பது உங்கள் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள், வாழ்க்கை முறை மற்றும் உங்கள் இடத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பு அழகியல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. இரண்டு வகையான சோஃபாக்களுக்கான சில பரிசீலனைகள் இங்கே:WOODEN SOFA :(TAMIL)1.அழகியல் முறையீடு (Aesthetic AppeaL):  மர சோஃபாக்கள் பெரும்பாலும் உன்னதமான மற்றும் காலமற்ற தோற்றத்தைக் கொண்டுள்ளன. அவர்கள் உங்கள் வாழ்க்கை இடத்திற்கு நேர்த்தியையும் அரவணைப்பையும் சேர்க்க முடியும்.2.ஆயுள் (Durability):உயர்தர மர சோஃபாக்கள் மிகவும்  நீடித்ததாக இருக்கும். அவை காலப்போக்கில் தேய்மானத்தையும்  தாங்கும், அவற்றை ஒரு நல்ல முதலீடாக மாற்றும்.3.பராமரிப்பு (Maintenance):மர சோஃபாக்கள் பொதுவாக சுத்தம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் எளிதானது. வழக்கமான தூசி மற்றும் அவ்வப்போது

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை - தண்டனை நிறுத்தி வைப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடியின் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இருவருக்குமான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்தார்.இன்று நேரடியாகவோ அல்லது காணொலி வாயிலாகவோ பொன்முடி மற்றும் அவரது மனைவி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி,இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜரானர். கோர்ட் அளித்த தண்டனை விவரங்களும் முக்கிய நிகழ்வுகளும் வருமாறு:-அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் வயதை கருத்தில் கொள்ள வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ வாதிட்டார். பொன்முடி மருத்துவ அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், பொன்முடியின் மனைவியும் தனது மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என பொன்முடியிடம் நீதிபதி கேட்டார். குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

தூத்துக்குடி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீட்டர் அதிகனமழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூரில் 67.9 செ.மீ மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செ.மீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் நாளையும் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.source :Daily Thanthi

குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது ? - டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை, நகராட்சி ஆணையர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறப்புக் கிளை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன.கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தத் தோ்வை 51 ஆயிரத்துக்கும் அதிகமானோா் எழுதியுள்ளனா். குரூப் 2 தோ்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணிகளைத் தொடங்க சிறிது தாமதமானதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.Source: DailyThanthi

அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, கடலூர் ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை ,அரியலூர் ,பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல் ,சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை , நெல்லை, ராமநாதபுரம்,தூத்துக்குடி, விருதுநகர் ,தேனி ,திண்டுக்கல், கோவை ,தென்காசி , திருப்பூர் , நீலகிரி , கன்னியாகுமரி , ஆகிய 31 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.source : DailyThanthi