தனித்து போட்டி... விஜய் போட்டியிடும் தொகுதி... தவெக செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை?
மின் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பால் விலை, பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக அரசுக்கு எதிராகவும், 3ஆவது மொழியை திணிக்க முயலும் மத்திய அரசின் கனவு எந்த காலத்திலும் நிறைவேறாது எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்ற நிலையில், கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதையொட்டி, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் காலை முதலே கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருகை தரத் தொடங்கினர். காலை 10.15 மணியளவில் விஜய் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, தொண்டர்களை பார்த்து விஜய் உற்சாகமாக கையசைத்தார்.அதைத்தொடர்ந்து செயற்குழு கூட்டம் தொடங்கியது. கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது, கட்சியின் செயல் திட்டம், நிர்வாகிகள் நியமனம் குறித்து இக்கூட்டத்தில்