Blogs

World Suicide Prevention Day SEP 10, 2024 : ஏன் தற்கொலை எண்ணம் வருகிறது? மீள்வது எப்படி? - விளக்கும் உளவியல் ஆலோசகர்!!

2003ம் ஆண்டு முதல் உலகம் முழுக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு நாள் முன்னெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடம் ஒரு கருப்பொருளுடன் இந்த தினம் முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக, ‘தற்கொலை எண்ணத்தை மாற்றுவது’ ‘உரையாடலை துவங்குவது’ என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலை எண்ணங்களை தடுப்பது குறித்தும் முன்பே கண்டறிந்து மீள்வது குறித்தும் நியுஸ் 18 தமிழ்நாடு சார்பாக உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்திடம் பேசினோம்.இந்த வருட கருப்பொருள் மூலம் சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும்?இதைப் பற்றி வெளியில் பேசுவதே கிடையாது. அதன் காரணமாக பேசுவதை ஊக்கிவிக்கவும், புரிதலை அதிகரிக்கவும், இதைப் பற்றிய பேச்சுகள் அதிகரிக்கவுமே இந்தக் கருப்பொருள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் மூலம், ஒருவருக்கு மற்றொருவர் ஆறுதல் கொடுக்கும் மனப்பாங்கு வரவேண்டும் என்பதும் முன்னெடுக்கப்படுகிறது.தற்கொலை தொடர்பான எண்ணங்கள் வரும்போது அதில் இருந்து விலகுவதற்காக அரசு உதவி எண் அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை

WORLD COCONUT DAY 2024

World Coconut day falls on September 2, 2024. For various reasons coconuts were used especially there is a special place in Indian Cuisine. It’s very delightful and essential flavouring for both savoury and sweet preparations. From the coastal regions of Kerala and Tamil Nadu to the tropical climates of Goa and Maharashtra, coconut can be found in everything from subtle curries to decadent desserts.Coconuts are used in many purposes in South Indian and Coastal Indian Cuisine for it's versatile taste and also coconut milk is very useful to cure ulcer problems. Tree of Life :·      It is also known as Tree of

ஆகஸ்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் லிஸ்ட்!!

நாட்டில் எஸ்யூவி-க்களின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் அதாவது ஆகஸ்ட் 2024-ல், எஸ்யூவி செக்மென்ட் நாட்டின் மொத்த கார் விற்பனையில் 55%ஆக இருந்ததே இதற்கு சாட்சி. கடந்த மாதம் நாட்டில் அதிகம் விற்பனையாகிய 10 கார்களில் ஆறு SUV-க்கள் இடம்பெற்றுள்ளன.அதே நேரத்தில் இந்த பட்டியலில் இருக்கும் SUV அல்லாத மாடல்கள் அனைத்தும் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தை சேர்ந்தவை. ஆகஸ்ட் 2024-ல் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த டாப் 10 கார் மாடல்களில் 6 SUV-க்களை தவிர, 3 ஹேட்ச்பேக் மாடல்களும் ஒரு MPV-யும் இருந்தன. அதே போல டாப்10 மாடல்களில் 6 கார்கள் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் கார்கள் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் இரண்டும், ஹூண்டாய் மோட்டார் இந்தியா மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் தலா ஒன்றும் இந்த பட்டியலில் அடக்கம். மாருதி சுசுகி நிறுவனத்தின் காம்பாக்ட்

மனைவி ஆர்த்தியை பிரிய என்ன காரணம்? - நடிகர் ஜெயம்ரவி சொன்ன விளக்கம் இதுதான்!

மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் ஜெயம் ரவி, நீண்டகால யோசனை மற்றும் பரிசீலனைக்கு பிறகே ஆர்த்தியை பிரிய முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.ஆர்த்தியை பிரியும் முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல என்றும், தன்னை சார்ந்தவர்கள் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.தனது தனியுரிமையையும், தனக்கு நெருக்கமானவர்கள் தனியுரிமையையும் மதிப்பளிக்கும் படியும் ஜெயம் ரவி கேட்டுக் கொண்டுள்ளார். விவாகரத்து முடிவு தனது சொந்த முடிவு என்றும், நடிப்பின் மூலம் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும் என்பதே தனது முன்னுரிமை எனவும் ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ளார்.Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . Source : https://tamil.news18.com/

சென்னையில் 81 இடங்களில் 3D பஸ் ஸ்டாப்.. என்னென்ன வசதிகள் தெரியுமா?

சென்னை பட்டினம்பாக்கம் சந்திப்பு, சாந்தோம், உள்ளிட்ட 81 இடங்களில் 3டி வடிவ பேருந்து நிறுத்தங்களாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னை மாநகராட்சி சார்பில் 1,420 பேருந்து நிறுத்தங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பல நிறுத்தங்கள் உடைந்த கூரைகள், மோசமான இருக்கைகள் மற்றும் சுவரொட்டிகளுடன் பழுதடைந்துள்ளன. இதில், 700 நிறுத்தங்கள் ஒப்பந்தக்காரர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.இதில் மாநகராட்சி கட்டிப்பாட்டில் உள்ள 720 நிறுத்தங்களில் 149 நிறுத்தங்கள் மிகவும் மோசமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்டினம்பாக்கம் சந்திப்பு, சாந்தோம், டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி உள்ளிட்ட 81 இடங்களில் 3டி வடிவ பேருந்து நிறுத்தங்களாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.அதில் முதற்கட்டமாக சென்னை மெரினா கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் 3டி வடிவிலான நவீன நிழற்குடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்டமாக 12 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் உள்ள 81 பேருந்து நிறுத்தங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளது. இந்த 3D பேருந்து

திருச்சியில் ரூ.2000 கோடிக்கு ஒப்பந்தகமாகி இருக்கும் புதிய நிறுவனம்!!

அமெரிக்காவில் 3 முக்கிய நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 5,365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 27-ம் தேதி இரவு அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காச் சென்றார். இந்தப் பயணத்தில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. கூகுள், மைக்ரோசாஃப்ட் தொடங்கி ஏஐ தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் BNY மெலான் நிறுவனம் வரை தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளது. இதற்கிடையே, தனது அமெரிக்க பயணத்தின் 18ம் நாளான இன்று காலை தமிழகத்துக்கு மிக நல்ல செய்தியை தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் ஜேபில் நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு செய்யவிருக்கும் செய்தியை அவர் வெளியிட்டார்.ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக உள்ள ஜேபில் நிறுவனத்தின் தொழிற்சாலை திருச்சியில் அமைகிறது.திருச்சியில் ஜேபில்

தந்தை உயில் எழுதவில்லை என்றால் திருமணமான பெண்ணுக்கு அந்த சொத்தில் பங்கு கிடைக்குமா? சட்டம் சொல்வது என்ன?

அப்பாவின் சொத்தில் பிள்ளைகளுக்கு பங்கு இருக்கிறதா? வாரிசுரிமை சட்டப்படி மகன்களுக்கு பங்கு இருப்பது போலவே, மகள்களுக்கும் பங்கு இருக்கிறதா என்ற சந்தேகம் இப்போது வரை பலருக்கும் இருந்து வருகிறது. அதிலும், அப்பாவுக்கு சுயமாக சம்பாதித்த சொத்து இருந்து, அதை உயிலாக எழுதி வைக்கவில்லை என்னும் பட்சத்தில், பெண்கள் தந்தையின் சொத்தில் உரிமை கோர முடியுமா? திருமணமான பெண்களுக்கு உரிமை இல்லையா என்பதைப் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தில், திருமணம் ஆனாலும் சரி, திருமணமாகவில்லை என்றாலும் சரி, எல்லா வாரிசுகளுக்கும், பெண்களுக்கும் பங்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்து வாரிசுரிமை (திருத்தியமைக்கப்பட்டது) சட்டம் 2005இன் படி அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தில் மகனுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதேபோல மகளுக்கும் உரிமை இருக்கிறது. திருமணம் ஆனாலும், ஆகவில்லை என்றாலும் இந்தச் சட்டம் பொருந்தும்.Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இந்த குறிப்பிட்ட ராசியினருக்கு அடிக்கும் ஜாக்பாட் !!

வேலை வாய்ப்பு, வெளிநாட்டு வேலை, சம்பள உயர்வு பெறப்போகும் ராசிகள். வரும் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த குறிப்பிட்ட ராசியினருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என ஜோதிடர் கிருஷ்ணகுமார் பார்கவா கணித்துள்ளார்.மேஷம் : இவர்களுக்கு கணபதியின் அருள் மழை பொழியும். கடின உழைப்பு மற்றும் உங்களின் அர்ப்பணிப்பு பாராட்டப்படும். பணியில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் நிதிநிலை மந்தமாக இருந்த நிலையில் சற்று முன்னேற்றம் காணப்படும்.மிதுனம் : இவர்களுக்கு அவர்கள் காண விரும்பிய இலக்குகள் நிறைவேறும். எல்லா துறைகளிலும் அங்கீகாரமும் மரியாதையும் அதிகரிக்கும். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு, மரியாதையை உயர்த்தும் நாளாக அமையும். பண முதலீடு லாபகரமாக அமையும். வெற்றி, உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.கடகம் : இவர்களுக்கு பொருளாதாரத்தில் மந்தம் காணப்பட்ட நிலையில் இப்போது முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி மற்றும் தொழில் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். கடினமான இலக்குகளை அடைய

சென்னை F4 கார் பந்தயத்தில் காவலர் மரணம்??

சென்னையில் தற்போது பார்முலா 4 கார் பந்தயம் கலைக்கட்டியுள்ளது.இதனை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து நடத்துகிறது.இந்த பந்தயமானது சென்னை தீவுத்திடலைச் சுற்றி மூன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.இதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் ஓமந்தூரார் மருத்துவமனை அருகே கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, உடன் இருந்த காவலர்கள், சிவக்குமாரை உடனடியாக மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நிவாரணம்  அறிவிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த காவலர் சிவக்குமாரின் குடும்பத்திற்கு  தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ரூ. 25 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய